அதிகாலை விடியும் போது
விழிகளிலே பல ஏக்கங்கள்
தொலைவினில் எரியும் சூரியனும்
துவண்டதுபோல் ஒரு நினைவு...
காத்திருந்த காலங்களில்
கனவுகள் கலைந்த கோலங்கள்
கோலங்கள் கலைந்த சோகங்களில்
விழிகளின் வழியே விதைத்துளிகள்..
புன்னகை பூத்த உதடுகளோ
இன்று சொல்ல மறந்த பல கதையை
கவிதைகளாக்கி முனகிட
புலம்பல்களே துணையானது...
என்று விடியும் இந்த வாழ்வு?
என்று மலரும் இங்கு வசந்தம்?
நாளைய விடியலின் ஏக்கத்துடன்
நலம் மறந்த இவ் உறவு...!
No comments:
Post a Comment