Saturday, October 15, 2011

கல்லறைக்கு....

உன் மனமெனும் மலரில் மோதி
உடைந்துபோனது என் ஜீவன்...
உலகின் இயக்கம் கூட தொலைந்துபோனது
உன் காலடியில்....

 
சுற்றும் காற்றுக்கூட
சயனித்த நேரம் அது...
சுமைகள் கூட
மௌனித்த நேரம் அது...

 
எல்லாம் ஒருநோடியில்
ஏதோ மாயமாகியது போல்
ஒரு ஏக்கம்
எழுந்தது இன்று...

 
கவியியற்றும் கரங்கள் கூட
தளர்ந்து போய்விட
காதல் சுமந்த இதயம் ஏனோ
வலியில் ரணமானது...

 
கவிதை பூக்களைக்கூட இன்று
காணிக்கையக்க முடியவில்லை- இதயம்
விம்முகிறது..

 
மௌனித்த கணங்களின்
வசிய இன்பம்
விழிநீராய் சுரந்து நிற்க
கவிப்பூக்கள் உனக்கு- நீர்ப்பூக்கள் எனக்கு..

 
என்றாவது ,
ஒருதடவை வருவாயோ- என்
கல்லறைக்கு
உன் ஒற்றை இதழ் பூக்களை 
சுமந்தவாறு....!
                                                                       

No comments:

Post a Comment