Wednesday, October 12, 2011

கவியின் கனவு.

கனவுகளே சுமையாகி
கவியியற்றும் பொழுது இது!
எதிர்பார்ப்புக்கள் ஏக்கமாகி
விடியலை நோக்கும் உறவு இது!

ஏதோ பல எண்ணங்களையும்
ஏதோ பல சோகங்களையும்
தன்னுள் கனவுகளாக்கி
கலங்க நிற்கும் எம்முறவு...!

சுகங்கள் என்பதை சுமைகளாக்கி..
சுமைகள் பலவற்றை கவியாக்கி..
துயர்படிந்த கறைகளை
விழிநீரால் கழுவும் நிலை..!

எழுந்திடு தோழா,
உயர்ந்திடு!
நாளை உனது!
கவிபடைக்கும் உன் கரங்களின்
கனவுகள் நிஜமாக வாழ்த்துக்கள்..!!!
                                                                       

No comments:

Post a Comment