Sunday, June 16, 2013

தந்தைக்கு ஒரு மாலை...




தன்னந்தனியே 
தாய்வயிறு கிழித்து 
மண்தொட்ட அந்தநேரம் 
என்னைத்தொட்ட 
முதல் உறவு 
நீயே அப்பா...

என் 
ஒற்றை விரல் கோர்த்து 
வாழ்க்கைபயணத்தை 
தொடக்கிவைத்தாய்...

பெண்ணாய் 
நான் பிறந்தேனென 
பெருமையோடு 
நீ மகிழ்ந்தாய்... 

காற்று வெளியினில் 
கைகோர்த்து 
கதைகள் 
பல சொன்னாய்... 

என் 
பாதம் பிடித்து 
நடை பழக்கி 
நீ மகிழ்ந்தாய்... 

மனதிற்கு மட்டுமல்ல 
அறிவிற்கும் 
கற்றுத்தந்தாய் 
பல கலை... 

நான் 
சிந்திடும் கண்ணீரில் 
உன் இதயத்தில் 
வலி கண்டாய்... 

என் 
புன்சிரிப்பில் 
துள்ளிக்குதித்தாய்
உலகை வென்றதாய்... 

இன்று 
என் பாதையின் 
ஒவ்வொரு அடியும் 
வருகின்றதே
உன் சுவட்டை தொடர்ந்து... 

ஆண்களில் 
தாய் நீ... 
அன்னையின் 
மறு உரு நீ... 

திறமைக்கு திறமையும் - 
துணிவுக்கு தனித்தன்மையும் 
நீ கற்றுத்தந்தவைதானே 
அப்பா... 

மீண்டும் 
ஒருமுறை 
மழலையாவேனா? 
உந்தன் மடியினில் நான் தூங்க...?

 கவியன்புடன்
பிறைநிலா- - 

Thursday, June 6, 2013

காய்ந்த கனவு..


நீண்டுபோன இரவுகளில்
நிழலைத்தேடி
தொடர்கிறது 
என் பயணம்..

நிசப்தமான
இடுகாடுகளிடையே
விடையின்றி
தேடுகின்றேன் என்
வினாக்களை..

மாண்டுபோனது
என் கனவு..
மரித்தலில் சுருண்டு
தீய்ந்து போனது..

கோடுபோட்ட 
வேலிதாண்டி
காலியான
வானைநோக்கி
கருகிப்பறந்தது
காய்ந்த கனவு..

காற்றோடு
அலைமோதி
காகிதத்தில் கரியாகி
தொடமுடியாமல்
தடுமாறிவிழுந்த கனவு
தலைதெரியாமலே போயிற்று
தணலோடு இன்று
வேகிற்று..!