Monday, November 29, 2010

விடியுமா.......?


நிறைந்த மலர்கள்
வாசனை தரவில்லை...
இனிய பொழுதுகள்
இனிமையை தரவில்லை...
விடிகாலைபொழுது
வசந்தத்தை தரவில்லை...
மாறாக..........;
வேதனையையும்;
தனிமையையும்;
வலிகளையுமே;
தந்தன எம் வாழ்வினில்...
விடிகின்ற பொழுதுகள்-இன்றும்
விடியலைத் தருமா? என்றெண்ணி
இருட்டறையினில் எம்முறவுகள்.....

இனியநாள்

இதயத்தில் என்றும் உன் நினவு
இளமையில் எங்கும் உன் வசந்தம்
இறகுகள் முழைத்தன
இன்றெனக்கு...
இனியவனே உன்னோடுசேரும்
இனியநாள் என்றெனக்கு.....???

காத்திருப்புக்கள்

காத்திருப்புக்கள் -
வாழ்வில் சுகமானவை தான்;
உன்னை நான் பார்த்த பின்பு.....
ஆனால்,
காத்திருப்பகள் கானலானதால்
கனவுகள் கலைந்தன இன்று....!

Tuesday, November 23, 2010

அன்பா.......?காதலா?

உன் விழி பார்த்த போது
என்னுள்- காதல்
எழவில்லை....

ஆனால் உந்தன்
மொழி கேட்டகணம்- என்னுள்
ஆயிரம் மாற்றங்கள்.....

உன்னுடன் பழகிய
இனிய பொழுதுகளின்- இதம்
மாற்றியது என்னை....

ஆனாலும் காதலை
மறுத்து என்னிதயம்- எனக்கே
பொய்யுரைக்கிறது.....

இது உன்னில்
நான் கொண்ட காதலா?- இல்லை
உன் மேற்கொண்ட அதீத அன்பா?

தெளியவில்லை இன்னும் நான்
எனினும் அறிவேன் அதை-உன்
மேல் நான் கொண்ட அதீத அன்பு என....!!!