Tuesday, November 23, 2010

அன்பா.......?காதலா?

உன் விழி பார்த்த போது
என்னுள்- காதல்
எழவில்லை....

ஆனால் உந்தன்
மொழி கேட்டகணம்- என்னுள்
ஆயிரம் மாற்றங்கள்.....

உன்னுடன் பழகிய
இனிய பொழுதுகளின்- இதம்
மாற்றியது என்னை....

ஆனாலும் காதலை
மறுத்து என்னிதயம்- எனக்கே
பொய்யுரைக்கிறது.....

இது உன்னில்
நான் கொண்ட காதலா?- இல்லை
உன் மேற்கொண்ட அதீத அன்பா?

தெளியவில்லை இன்னும் நான்
எனினும் அறிவேன் அதை-உன்
மேல் நான் கொண்ட அதீத அன்பு என....!!!

No comments:

Post a Comment