Sunday, October 28, 2012

காற்றைக் கிழித்தபடி..!


பூமியில் புதைந்து
புதுமையாய் எழுகிறது
ஓர் நாற்று..

சகதியில் புரண்டு
சகலமும் அடங்கி
சலனமற்றதாய்
ஓர் காற்று..

காற்று..
அது நாற்றை தேடி
ஓலமிட
நாற்று..
அது
காற்றை கிழித்து
கூச்சலிடும்..

ஆயிரம் பிணந்தின்னிகளும்
நூறாயிரம் காட்டேரிகளும்
பலகோடி சாத்தன்களும்
படபடக்கும் நிசப்தவேளை..

காற்றைக் கிழித்த
நாற்றுமட்டும்
காலதேவனை
நாடிச்செல்லும்..

காலதேவனின்
காலடித்துகள்
காலத்தையே
மறைத்து நிற்கும்..

அணுவுக்குள்
கருவாகி
ஆகாயமே
அகண்டமாகும்..

நாற்று மட்டும்
நிர்க்கதியாகி
நாயகனின்
காலடி சேரும்..!

Thursday, October 25, 2012

கலக்கம் வேண்டாம் காரிகையே..


இதயத்தில் தினம்
உனை சேர்க்கின்றேன்..
இமைகளில் பல
கவி லோர்க்கின்றேன்..

கனவுகள் மெய்ப்படும்
காலம் வரும்..
காதலால் உனைச் சேரும்
கனவுகள் வெல்லும்..

காத்திரு அன்பே,
வருவேன் உனக்காக..
என் தேவதையே
எந்த தடையெனினும்
தாண்டிவரும் என் காதல்..

என் காதல் கண்ட
தேவதையே..
கலைக்காதே உன் கனவுகளை
கலையாதே-நம் உறவுகளும்..

ஆயிரம் சிறைதாண்டி
ஆண்டவன் உனை வைத்தாலும்
கலங்காதே கண்மணி
உனை காக்க வந்திடுவேன்..

என் உடல் விட்டு
உயிர் போனாலும்
உனக்காக மீண்டும்
உயிர் கொள்வேன்..
என் உயிரோடு
உனைக்காப்பேன்..

உன் மனதில்
நானிருந்தால்
எனக்காய் காத்திரு நீ..

கலக்கம் வேண்டாம்
காரிகையே..
காலமெல்லாம் நான்
உன்னுடன்..!

Wednesday, October 17, 2012

கனவுகளுக்கு தாயாகியவளாய்..!


கட்டியணைத்து
நீ
கவிபாடும் நிமிடங்கள்
இசை பாடும்
என்னுள்..!

*****

உன் புன்னகையில்
மலர்ந்திடும்
நான் எனும்
மலர்..!

*****

நீ விரித்த
ஸ்வாசத்தில்
நினைவிழந்துபோகும்
என் பெண்மை..!

*****

உன் தூண்டலுக்கு
துலங்காமல்
வெட்கும்
இவள்
மென்மை..!

*****

வல்லினமாகிய 
நீ
மெல்லினமாகி
வீசும்போது
வலுவிழந்துபோகும்
பூந்தேகம்..!

*****

காதலிலும்
கவி இசைத்து
கவிகளே
நீயாக
கனவுகளுக்கு
தாயாகியவளாய்
இவள்..!

Tuesday, October 16, 2012

என்னை வாழவிடு..!



அன்பானவளே,
கண்ணீரால் எழுதுகின்றேன்
இக் கவியை..

காதலியே..
கண்ணுக்குள்
பொன்னாய் உனை வைத்தேன்..
உயிருக்குள் உறவாய்
சிலை செய்தேன்..

என்னவளே,
சிதைத்துவிட்டாயடி
நீ என்னை..
சித்தம் கலங்குதடி..
சீக்கிரம் வந்துவிடு!

மரணம் கூட
இனிமைதானடி
மலரே உன்
பொன்மடி
நான் சாய்ந்தால்..

கண்மணி
நீ எனை பிரிந்தால்
வாழ்வே நரகமடி..
வந்துவிடு என்னிடம்..
வாழவிடு என்னை
உன் மனதிடம்..!

Monday, October 8, 2012

நான்..!



கனவுகள்
காணும் பொழுதினிலே
காதலிப்பேன் உன்னை
நான் - உன்
காதலியாகி..!

****
கைகோர்த்து
காலமெல்லாம்
தோள் கொடுத்து
உடன் வருவேன்
நான் - உன்
தோழியாகி..!

****
இதயம் துடித்து
விழிநீர் வழியும் வேளை
இருகரம் சேர்த்து
அணைத்திடுவேன்
நான்
உனக்கான தாயாகி..!

காத்திருத்தல்...!

காத்திருத்தலில் தான்
புரிகிறது..
அன்பே,
நான் 
உன்மீது கொண்ட பாசமும்
நீ
என்மேல் கொண்ட 
காதலின் ஆழமும்..!

Friday, October 5, 2012

உன் முகம் பார்த்ததால்..!



உடைந்து போன
என் கனவுகளை
உனக்காய் 
கோர்த்துவைத்திருக்கும்
என் மனது..!

******
சில நாட்களாய்
பாலைவனமாகிவிட்ட
என் மனதில்
மழை- உன் முகம்
பார்த்ததால்..!

******
மீண்டும் 
கனக்கிறது விழிகள்
எம் 
தொலைந்துபோன
நாட்களை எண்ணி..!

*****
ஏக்கங்களை தந்து
தூக்கங்களை
பறிக்கிறாய்- அன்பான
திருடன் நீ..!

*****
மீண்டும்
உடைந்த கனவுகளை
கோர்க்கின்றேன் - உன்
தரிசனத்திற்காய்..!

காத்திருப்பு!


உனக்கான
காத்திருப்புக்களோடு
நகர்கிறது 
நிமிடம்- ஏமாற்றங்களை
சுமந்தபடி..!

நீ!


நீ
தொலைவாகிப்போனாயோ..
இல்லை
உன்னில்லிருந்து
நான்
பிரிக்கப்பட்டேனோ...?