Wednesday, October 17, 2012

கனவுகளுக்கு தாயாகியவளாய்..!


கட்டியணைத்து
நீ
கவிபாடும் நிமிடங்கள்
இசை பாடும்
என்னுள்..!

*****

உன் புன்னகையில்
மலர்ந்திடும்
நான் எனும்
மலர்..!

*****

நீ விரித்த
ஸ்வாசத்தில்
நினைவிழந்துபோகும்
என் பெண்மை..!

*****

உன் தூண்டலுக்கு
துலங்காமல்
வெட்கும்
இவள்
மென்மை..!

*****

வல்லினமாகிய 
நீ
மெல்லினமாகி
வீசும்போது
வலுவிழந்துபோகும்
பூந்தேகம்..!

*****

காதலிலும்
கவி இசைத்து
கவிகளே
நீயாக
கனவுகளுக்கு
தாயாகியவளாய்
இவள்..!

No comments:

Post a Comment