கட்டியணைத்து
நீ
கவிபாடும் நிமிடங்கள்
இசை பாடும்
என்னுள்..!
*****
உன் புன்னகையில்
மலர்ந்திடும்
நான் எனும்
மலர்..!
*****
நீ விரித்த
ஸ்வாசத்தில்
நினைவிழந்துபோகும்
என் பெண்மை..!
*****
உன் தூண்டலுக்கு
துலங்காமல்
வெட்கும்
இவள்
மென்மை..!
*****
வல்லினமாகிய
நீ
மெல்லினமாகி
வீசும்போது
வலுவிழந்துபோகும்
பூந்தேகம்..!
*****
காதலிலும்
கவி இசைத்து
கவிகளே
நீயாக
கனவுகளுக்கு
தாயாகியவளாய்
இவள்..!
No comments:
Post a Comment