Thursday, October 25, 2012

கலக்கம் வேண்டாம் காரிகையே..


இதயத்தில் தினம்
உனை சேர்க்கின்றேன்..
இமைகளில் பல
கவி லோர்க்கின்றேன்..

கனவுகள் மெய்ப்படும்
காலம் வரும்..
காதலால் உனைச் சேரும்
கனவுகள் வெல்லும்..

காத்திரு அன்பே,
வருவேன் உனக்காக..
என் தேவதையே
எந்த தடையெனினும்
தாண்டிவரும் என் காதல்..

என் காதல் கண்ட
தேவதையே..
கலைக்காதே உன் கனவுகளை
கலையாதே-நம் உறவுகளும்..

ஆயிரம் சிறைதாண்டி
ஆண்டவன் உனை வைத்தாலும்
கலங்காதே கண்மணி
உனை காக்க வந்திடுவேன்..

என் உடல் விட்டு
உயிர் போனாலும்
உனக்காக மீண்டும்
உயிர் கொள்வேன்..
என் உயிரோடு
உனைக்காப்பேன்..

உன் மனதில்
நானிருந்தால்
எனக்காய் காத்திரு நீ..

கலக்கம் வேண்டாம்
காரிகையே..
காலமெல்லாம் நான்
உன்னுடன்..!

No comments:

Post a Comment