Thursday, December 9, 2010

க'விதை' ----......

கவிதை என்பது...
களங்கமற்ற பல
கனவுகளின் வாயில்..........

உணர்ந்து கவியியற்றினால்
உண்மையான அதன்
உயிர்ப்பு புரியும்........

இதயத்தின்
இனிமையையும்
இவ்வுலக துயரத்தையும்
இயல்பாய் கூறும் கவிதை...

க'விதை'  ----
கருத்தை விதைத்து
கருவை வளர்ப்பது....

கனவுகளை சிதைக்காதீர்...
கவிதையை பிரதியாக்காதீர்...
கண்களில் நீர்தனை
களமாக்கி செல்லாதீர்..

கவியை திருடுவது...
கல்நெஞ்சக்காரர் செயல்...
தாயின் அமுதத்தை
பிழிந்தெடுக்கும்
ஈனச் செயல்...

எமது உயிரை,
உயிர்ப்பை
எடுத்தெறிந்து
அழிக்கும் செயல்...

இதைவிட
எம்மை
உயிரோடு
புதைத்துவிடுங்கள்.....

ஆனால்...
எம் உயிர்நாடியை
எம்மிடமிருந்து
பிரிக்காதீர்கள்..

சுய உணர்வுகளை
சுதந்திரமாய் பயன்படுத்தி
இயற்றுங்கள் உங்கள்
இளமைக் கவியை...
பிரதி செய்யாதீர்..
எம் ஜீவ கவியை...!!!

Monday, November 29, 2010

விடியுமா.......?


நிறைந்த மலர்கள்
வாசனை தரவில்லை...
இனிய பொழுதுகள்
இனிமையை தரவில்லை...
விடிகாலைபொழுது
வசந்தத்தை தரவில்லை...
மாறாக..........;
வேதனையையும்;
தனிமையையும்;
வலிகளையுமே;
தந்தன எம் வாழ்வினில்...
விடிகின்ற பொழுதுகள்-இன்றும்
விடியலைத் தருமா? என்றெண்ணி
இருட்டறையினில் எம்முறவுகள்.....

இனியநாள்

இதயத்தில் என்றும் உன் நினவு
இளமையில் எங்கும் உன் வசந்தம்
இறகுகள் முழைத்தன
இன்றெனக்கு...
இனியவனே உன்னோடுசேரும்
இனியநாள் என்றெனக்கு.....???

காத்திருப்புக்கள்

காத்திருப்புக்கள் -
வாழ்வில் சுகமானவை தான்;
உன்னை நான் பார்த்த பின்பு.....
ஆனால்,
காத்திருப்பகள் கானலானதால்
கனவுகள் கலைந்தன இன்று....!

Tuesday, November 23, 2010

அன்பா.......?காதலா?

உன் விழி பார்த்த போது
என்னுள்- காதல்
எழவில்லை....

ஆனால் உந்தன்
மொழி கேட்டகணம்- என்னுள்
ஆயிரம் மாற்றங்கள்.....

உன்னுடன் பழகிய
இனிய பொழுதுகளின்- இதம்
மாற்றியது என்னை....

ஆனாலும் காதலை
மறுத்து என்னிதயம்- எனக்கே
பொய்யுரைக்கிறது.....

இது உன்னில்
நான் கொண்ட காதலா?- இல்லை
உன் மேற்கொண்ட அதீத அன்பா?

தெளியவில்லை இன்னும் நான்
எனினும் அறிவேன் அதை-உன்
மேல் நான் கொண்ட அதீத அன்பு என....!!!

Tuesday, October 19, 2010

இளையவனே

இதயம் ஏங்கும் உன்
இனிய நினைவிற்காய்...
இதழ்கள் ஏங்கும் உன்
இனிய பெயர் கூறிட
இளையவனே என்றும்
இனிதாய் உன்னில் நான் வேண்டும்....!!!

Monday, October 18, 2010

நேற்றைய காற்றே ....!!!

வாழ்க்கையில் இனிமைகள்
என்றும் எனக்கு கானல் நீர்!
இதயத்தின் உணர்வுகள்
என்னுள் ஆறாக்காயங்கள்
எனினும் -என் உணர்வுகளில்
இனிய உறவாக நேற்றைய காற்றே
என்றும் நீ என்னுடன்...!-sooriyan fm....

TUYARILE...!

Tunpam niraintha en
Tuyara vaalvu tanil
Inpakkiitrukkal enru
Inimayaai ozhi viisum..?
Tuyarin maditanil tuyilum
En tunpa itayam
Enru inimayin itattai sukikkum..
Iraivaa...arulaayo....
Enrum tuyaratil intha nila
Niintidumo....ennippaar....

MANNIPPAYA-....!!!

Nanbane Nadpin Makattuvam 
Purintatada Unnaal
Enrum Innaal Vendum
En Vaazhvinil Ponnaazhai
Eninum En Manatin Oram
Etho Oor Vetanai...
Ennaal Taano Un Manam Vadiyatu!
Nanba...Nesikkiren Unnai
Enrum Nesippen En Uyirin Irutivarai...
Eninum Mannippaaya Ennai-....!!!

Saturday, October 16, 2010

Ennavane...!!


Ennavane enrum unakkaai
En itayam kaattirukka
En ilamaikkaalam Unnaye
paarttirukka
Ennavane inru nii illai
Ennai sernthu vida...!!!!

UNAKKAAKA...!


Inimayaana Ilaya Nilavol(z)i Tanile
Itayattin Inimayile
Inpamaana Unarvukal Sumanthu
Ilamayudan Nindrirunten
Iniyavane Unakkaaka...!