Monday, February 1, 2016

ப்ரிய நட்சத்ரா..


என் ப்ரிய நட்சத்ரா,
உன் கண்களை மூடிக்கொள்.
நீ சூழ்ந்துள்ள என் நினைவுகள்
அழகானவை.
என் நேசக்கடல்மீது உனக்கான
அலைகளை பரப்பிவிடுகின்றேன்.
பார்த்து மகிழ்ந்துகொள்
கண்களைத்திறந்துவிடாதே.

பழிகளின் கற்கள் உன்னை 
தாக்கக்கூடும்.
பெண் நீ என்பதால்
நடத்தையில்கூட உன்னை
பழிக்கக்கூடும்.
வஞ்சகக்காரியாய் நீ தெரியக்கூடும்.
உன்னை வஞ்சிக்க ஒரு கூட்டம்
அலையக்கூடும்.
உன் படுக்கையில் மட்டும் 
பங்குகேட்டு
பரிகசிக்கவும் ஸ்பரிசிக்கவும்
அலையக்கூடும்.
நீ தனித்திருக்கையில் உன்னை
தீண்டிக்கொல்ல அரவமாய் 
அணைக்கக்கூடும்.

ஆதலால் என் பிரிய
நட்சத்ரா,
உன் கண்களைத் திறந்துவிடாதே.
என் நேச அலைகளோடே
அமைதிகொள்
நாம் புதிதாய் பிறந்து 
உலகை விதைப்போம் 
அதுவரை உன் கண்களை
நீ திறந்துவிடாதே.

-பிறைநிலா-
01/02/2016
4:49pm

No comments:

Post a Comment