Saturday, October 26, 2013

பூனைகள் உலகம்..


எங்கோ 
நீண்டுபோகின்ற
இரவு..
அதற்குள் 
தொலைந்துபோகின்ற 
நிலவு..

மௌனங்கள்
உடைபட்டு
மோகங்கள்
தடைப்பட்டு
சலங்கள்
விதைக்கப்படுகின்றன..

சுவர்களை சுற்றியும்
‘மியாவ் மியாவ்’ 
சத்தம்..

பச்சை நிற விளக்கு
அதில்
பளிச்சிட்டு எரியும்
நெருப்பு..

இரைகளைத்தேடியதாய்
இரைச்சலைக்கிளப்புகிறது
இயற்கை..

கறுப்பு பூனைகளின்
மரத்துப்போன நாவிற்கு
மலர்ந்து மணம்பூத்த
மலர்களே இரையாக..

வெள்ளை நிற
பூனைகளின்
வண்ணநிறம்கூட
விஷமாகும் காலமிது..

எந்த நிறமென்றாலும்
இவை யாவும் ஒரே
தரம் அன்றோ..
எங்கும் 
மலர்களை சிதைத்துப்போக
மானிடராய் பிறந்ததன்றோ..

எங்கெங்கிலும்
பச்சை நெருப்பு..
அதில் கருகிச்சரியும்
மங்கை விருப்பு..

மீண்டும்
எங்கோ 
நீண்டுபோகின்ற
இரவு..
அதற்குள் 
தொலைந்துபோகின்ற 
நிலவு..


-கவியன்புடன்
பிறைநிலா-

Tuesday, October 22, 2013

அண்ணனுக்காக..


அண்ணன் தங்கை உறவில் எப்போதும் ஒரு காமம் இல்லா காதல் இருக்கத்தான் செய்கிறது... 

காதலனாலோ அல்லது காதலியாலோ அந்தக்காதலை தந்துவிட முடியாது... 
தாய்மையுடன் கலந்த கண்டிப்புக்களும் 
நட்புடன்கூடிய அன்பான காதலும் என்றும் அண்ணன்களுக்குமட்டுமே சொந்தமானவை... 

அண்ணன்களுக்காய் தங்கைகள் கொடுக்கும் முத்தத்திலும் - 
தங்கைகளுக்காய் அண்ணன் கொடுக்கும் முத்தத்திலும் அணைப்பினிலும் 
காமம் கலப்பதில்லை...

அது தாய்மை கடந்த தூய்மையாய் வெளிப்படுகின்றது.. 


ஆனந்தத்தின் நடுவினிலே அழுகை வரவைக்கவும் 
அழும் பொழுதுகளில் புன்னகைக்க வைக்கவும் இவர்களால் முடிகிறது... 

செல்லமான குட்டுக்களும் 
இன்பமான திருகல்களும் இவர்களுக்கேயுரிய அன்பின் வெளிப்பாடு... 

தங்கை அழுதால் தானும் அழுவதும் தங்கைக்காயே தான் வாழ்வதும் அண்ணன்களுக்கேயுரிய சிறப்பு... 

தங்கைக்கு ஒன்று என்றால் தன் உயிரை வருத்துவதிலே தெரிகிறது இவர்களது பிஞ்சு நெஞ்சம்... 


ஒரு நண்பனாய் ஒரு குழந்தையாய் ஒரு தாயாய் சில பொழுதுகளில் தந்தையாய் மாறிவிட இவர்களால்மட்டுமே முடிகிறது. 

தன் தங்கையை ஒரு தோழியாய் ஒரு குழந்தையாய் ஒரு தாயாய் மாற்றிவிடவும் முடிகிறது 
இவர்களது தூய்மையான அன்பின் வலிமையினால்... 

அண்ணன் ஒருவன் இருந்தாலே போதும் 
தங்கைகளின் உலகம் மலர்ந்துவிட... 

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
அண்ணனுக்காக
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
~கவியன்புடன் 
பிறைநிலா~ 
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥