எங்கோ
நீண்டுபோகின்ற
இரவு..
அதற்குள்
தொலைந்துபோகின்ற
நிலவு..
மௌனங்கள்
உடைபட்டு
மோகங்கள்
தடைப்பட்டு
சலங்கள்
விதைக்கப்படுகின்றன..
சுவர்களை சுற்றியும்
‘மியாவ் மியாவ்’
சத்தம்..
பச்சை நிற விளக்கு
அதில்
பளிச்சிட்டு எரியும்
நெருப்பு..
இரைகளைத்தேடியதாய்
இரைச்சலைக்கிளப்புகிறது
இயற்கை..
கறுப்பு பூனைகளின்
மரத்துப்போன நாவிற்கு
மலர்ந்து மணம்பூத்த
மலர்களே இரையாக..
வெள்ளை நிற
பூனைகளின்
வண்ணநிறம்கூட
விஷமாகும் காலமிது..
எந்த நிறமென்றாலும்
இவை யாவும் ஒரே
தரம் அன்றோ..
எங்கும்
மலர்களை சிதைத்துப்போக
மானிடராய் பிறந்ததன்றோ..
எங்கெங்கிலும்
பச்சை நெருப்பு..
அதில் கருகிச்சரியும்
மங்கை விருப்பு..
மீண்டும்
எங்கோ
நீண்டுபோகின்ற
இரவு..
அதற்குள்
தொலைந்துபோகின்ற
நிலவு..
-கவியன்புடன்
பிறைநிலா-
/// எந்த நிறமென்றாலும் இவை யாவும் ஒரே
ReplyDeleteதரம் அன்றோ....? ///
அருமை...
தொடர வாழ்த்துக்கள்...