Tuesday, November 26, 2013

மீண்டும் விதைத்தல்..


மண் பிளந்து
மரம் நாட்டி
வேர் பிளந்து
பணமாக்கி
பிணமாய் போகும்
உலகமிது..

இங்கு
மரணம் மட்டுமல்ல
மனிதம் கூட
மரணித்துவிட்டது
இன்று..

ஆழக்கடலோடி
நீல வான் பல தாண்டி
புனிதத்தை வைத்தான்
இறைவன்..

அதை
புதைப்பதில்
இனிமைகண்டான்
மனிதன்..

தென்பொதிகை
இசைபாடி
தேன் சிந்தும்
கனிதேடி
தொலைந்துதான் போனோம்
பலவற்றை
தொலைத்தும்தான் போனோம்..

ஏக்கத்திலும்
எதிர்ப்பினிலும்
எரித்துவிட்டோம் 
எம் வாழ்வை..

என்றாவது
புதிதாய் விதைப்போம்
நம் கனவை..

மீண்டும்
புதிதாய் ஜனிப்பிப்போம்
வெண்நிலவை..


-கவியன்புடன்
பிறைநிலா-

1 comment:

  1. சொன்னவை இன்றைக்கு அப்படித்தான் இருக்கு... ம்...

    ReplyDelete