இரவுக்கு மட்டுமே
நீட்சிகளின் வரங்கள்
கொடுக்கப்பட்டிருக்கிறதுபோலும்..
சொடுக்கப்பட்ட
கடிகார கம்பிகள்
நகர மறுக்கும்..
அவலங்களின்
உச்ச ஸ்தாயி
உயிரை உலுக்கும்..
எங்கோ தொலையத்துடிக்கும்
ஜீவனும் புதைந்துபோகும்
அந்தகாரத்தில்..
விடியல்களை ஒத்திப்போடும்
இந்த இரவுக்கு மட்டுமே
நீட்சிகளின் வரங்கள்
கொடுக்கப்பட்டிருக்கிறதுபோலும்..
-கவியன்புடன்
பிறைநிலா-
No comments:
Post a Comment