விழிகளின்
தொலைவுகள்
வழியே
கனவுகளின்
காலஎல்லை..
மௌனத்தின்
ஸ்வரத்தினிலே
மாயத்தின்
மனவலைகள்..
வாழ்வியலில்
தொலைந்த
வசந்தம்
மீண்டும்
பூக்குமென
எண்ணங்கள்...
சிதைக்கப்பட்ட
நினைவுகளில்
சித்திரமாய் பல
வலிகள்...
காலத்தின்
வேதனையில்
கவிகளின்
காதல் இங்கே..
மௌனித்த நாதத்துள்
இசைக்கீறலாய்
ஓர்
அழுகுரல் ஒலித்திட...
விதி எனும் விதைக்குள்
அறையப்பட்ட ஆணியாக
நகர்கிறது
இந்நாட்கள்..
நிர்க்கதியாகி
நடைபிணமான
உடலைச் சுமந்து
காட்டுவழியில் ஓர்
பயணம்..
இசையாகிக் கசிவதற்குள்
விறகாகி தணலான
மூங்கில் களியொன்று
மூர்ச்சையாகிறது இங்கு..
விதைக்கப்பட்ட விதைகள்
முளைகளிலே கருகிப்போக
சப்பித் துப்பப்பட்டு
சபிக்கப்படுகிறது இங்கே ஓர் வாழ்க்கை...
No comments:
Post a Comment