பிரிவு-
பிரிவு என்ற வார்த்தைகள்
எம்மில் எழுதிச்சென்ற
கவிதைகள் பல..
மௌனத்தின் சங்கீதத்தில்
ஜனன கீதம் இசைக்கிறோம்..
இனிக்கும் நினைவுகளில்
துயரத்தை சுமக்கிறோம்..
காதல் கீதங்கள்
கனவினை சுமந்துநிற்க-
கனவின் சோகங்கள்
மலர்களாய் பூத்திருக்க
பிரிகின்றோம் நாம்
மீண்டும்
எங்காவது சந்திப்போமென...
ஒலிக்கும்
இசைகூட
மௌனமாய்
சபிக்கப்படுகிறது
எமக்குள்..
பார்வைகளின்
பரிதவிப்பு
படபடப்புடன்
தொட்டுச்செல்கிறது..
நினைத்துச் சென்ற
எண்ணங்கள்
வண்ணங்களாய்
மாறி
அழியாத
ஓவியமாகிறது
மனச்சுவரினிலே..
பிரிவு..பிரிவு
எண்ணிய
எண்ணங்களை
காலக்கண்ணாடியின்
ஓரத்திலே
படரவிடப்போகும்
ஓர்
தொலைக்கப்பட்ட
இன்பச்சிதறல்...
தொலைந்தோம்..
தொலைக்கப்பட்டோம்...
மீண்டும்
என்றோ
இணைவோம்
என்பதனால்..
No comments:
Post a Comment