தொட்டுச்சென்றது
காற்று..- என்னை
விட்டுச்சென்றது
காலம்...
எட்டிநின்று
தொட்டுப்பர்க்கும்
உன் நினைவுகள் மட்டும்
எப்போதும்
என்னோடு..
மலரும்
உன் நினைவுகள்
மாறாத வடுவாக
எப்பொழுதும் என்னுள்ளே..
மாறாத - மாற்றப்படாத
மாற்றமுடியாத
ஓர் எண்ண அலையாக
நீ மட்டுமே வேரோடினாய்
என்னுள்ளே...
சுற்றுகின்ற பூமிகூட
அசைவற்றுப்போகலாம்
ஆனால்
உன் சுவாசத்தில்
துடிக்கும் என் இதயம்
எப்போதும் மரிக்காது..
மரிக்கப்படாத மறைக்கப்படாத
மாற்றமுடியாத
காதலாக
எம் காதல்
நம்முள்ளே..
தொலைக்கப்பட்ட
சோகங்களும்
தொலைந்துவிட்ட
மாற்றங்களும்
தொலைவாகிப்போனது
இன்றைய வாழ்வினிலே..
வாழ்வின் வேரோடி
வசந்த நீர் தேடி
ஆழ்கடலில்
அலைகின்றேன்
ஆதாரம் நீயாக..
மழலையின் நாதமும்
மயங்கி நிற்கும்
மன்னவன் உன்னில்..
அன்பான உன் பாசம்
அலையான உன் நேசம்
ஆழ்ந்த உன் ஸ்வாசம்
அத்தனையும் இசையாகும்..
மழையின் சங்கீதம்
மார்போடு ஸ்வரமாகும்..
மலரின் மௌனமொழி
மனதோடு கவியாகும்..
ஆனால்
ஏதோ தனிமை..
இன்று-
தொட்டுச்சென்றது
காற்று..-
என்னைவிட்டுச்சென்றது
காலம்...
தொலைதூரப்பயணமிது..
தெவிட்டாத சலனமிது..
தெம்மாங்கு பாடலாக
இசைபாடும் இளமையிது..
ஆனால் ஏனோ
மறைந்துபோனது
இன்றைய நாளின்
எண்ண அலைகள்..
எனினும்
மாற்றமுடியாத
ஒன்று-
மரிக்கப்படாத
மறைக்கப்படாத
மாற்றமுடியாத
காதலாக எம் காதல்..
No comments:
Post a Comment