Tuesday, August 28, 2012

ஜீவன்கள் பலவிதம்...



தனித்தலின் 
அந்தத்தில்
தலைகீழாய் 
தொங்கும் 
ஜீவன்..

மௌனித்தலின் 
ஸ்வர ஜதியில்
மனதை 
தொலைத்துவிட்ட 
ஓர் ஜீவன்..

சந்தித்தல் என்பது
சலனமாகிப்போக
சங்கதி தொலைந்து 
சரணமானது ஓர் ஜீவன்..

சர்வமும் அடங்கி
சரித்திரம் படித்திட
சாந்தமானது ஓர் ஜீவன்...

கொந்தளிக்கும் 
ஜுவாலைகளில்
வெந்து தணலானது
ஓர் ஜீவன்..

வெட்கம் கெட்ட புன்னகையில்
ஆடையவிழ்த்தது 
ஓர் ஜீவன்..

ஆழ்கடலின் மையத்தில்
அன்பை தேடியது
ஓர் ஜீவன்...

ஜீவன்கள் பலவிதம்
அதிலே
ஒவ்வொன்றும் 
ஒரு ரகம்...

அதிசய ராகமாய்
இசைவான ஜீவன்கள்
அன்னிச்சையின் அந்தத்தில்
அசையத்தொடங்கும்
மீண்டும் ஓர் தேடலுக்காய்...!

Wednesday, August 8, 2012

முத்தம்..



இதழ்களால்
நீ வருடும்
ஒரு 
சுகந்தம் போதும்-
நூறு ஜென்மம்
நான் வாழ்ந்திட..

Tuesday, August 7, 2012

மாறிப்போன பெ/ஆண்மை.. (தறிகெட்டுப்போனவர்களுக்காய்)


ஊரென்பர்.. பேரென்பர்..
நாடென்பர்.. வீடென்பர்..

கன்னியை பார்த்து
கவிதை வடிப்பர்..
அண்ணியுடன் சேர்ந்து
கட்டில் கலை படிப்பர்..

தொட்டிலில் ஆடும்
குட்டிக் குழந்தையைக்கூட
தொட்டுப்பார்க்கும்
வஞ்சக நெஞ்சம்..

பார்வைக்கு அஞ்சி
பயந்தொளியும் பெண்மை
இன்று
பூவுக்கு ஏங்கி
புது சுரம்
பாடுகிறது..

கட்டிவிட்டு
தொட்டுச்சென்ற கணவன்
தொலைவாகிவிட
எரியும் நெருப்பை
கொழுந்தன் அணைக்கின்றான்..

சீதைகளான பெண்கள்
சிதைகளில் மாண்டுபோக
போதைகளாய் கண்கள்
சீர்கெட்டு அலைகிறது..

பத்தாம் வகுப்பில்
பாலியல் சீர்கேடு..
பற்றவைத்தது
பள்ளியின் ஓர் கிளடு..

விதவைகள் கூட இங்கே
விற்பனை பொருட்கள் தான்..
கலவைகளில் அவை கலக்க
விதியெங்கே..? கதியெங்கே..?

சொந்த மகளின்
சுகம் கண்டு
சிதைத்த கதை
கேளீரோ..?

சுட்டுவிடும் சூரியனும்
இதைக்கண்டு
சுடமறந்து கண்ணீர் விடும்..

சித்திர பாவையவள்
சீவிமுடிக்க மறந்திட்டாள்..
உத்தரத்தில் தொங்கிவிட்டால்
உறுத்தலில்லை காணீரோ..?

பெண்ணும் இன்று 
பெண்ணாயில்லை..
ஆணுமின்று
ஆணாயில்லை..
அபலைகளின் வாழ்வுமட்டும்
அந்தரத்தில்..
இது
மாறவில்லை...! 

கனாக்களில்..




கனாக்களில் 
வாழ்கின்றோம்..
தொலைவாகிப்போன 
இனிமைகளுடனும்..
தொலைத்துவிட துடிக்கும்
தனிமைகளுடனும்..

உணர்வுகளால்...




பார்த்து மகிழ்ந்த காலங்கள்..
பழகி ரசித்த நேரங்கள்..
பேசி சிரித்த ராகங்கள்..

தொடர்ந்தனகனவுகள்..
தொலைந்த நாட்களை
மீண்டும் எண்ணியவாறு
நீ அங்கே- நான் இங்கே..
உணர்வுகளால்
நெருங்குகின்றோம்..
உளறல்களை 
கவியாக்கி விதைத்தபடி..!

Sunday, August 5, 2012

என்றென்றும் உரிமையுடன்...!!!



நம்மை இணைத்தது
நலம்கொண்ட நம் நட்பு...
நம்மில் இணைந்தது
கவியமாய் நம் அன்பு...

மௌனமான மனதினிலே
நட்பினாலே நுழைந்தவனே
நலம்கொண்ட உன் அன்பு
நாடாளும் நம் நட்பு...

அன்பான உன் நேசம்
பண்பான உன் பாசம்
கனிவான நம் நேசம்
காவியமாய் நம் நட்பு...

கணம்தோறும்
தினம்தோறும்
மனதோடும் 
கவிபாடி..தொடரட்டும் நம்
நட்பு..என்றென்றும் 
உரிமையுடன்...!!!

உனக்காய்
உன் உயிர்த்தோழி..!