தனித்தலின்
அந்தத்தில்
தலைகீழாய்
தொங்கும்
ஜீவன்..
மௌனித்தலின்
ஸ்வர ஜதியில்
மனதை
தொலைத்துவிட்ட
ஓர் ஜீவன்..
சந்தித்தல் என்பது
சலனமாகிப்போக
சங்கதி தொலைந்து
சரணமானது ஓர் ஜீவன்..
சர்வமும் அடங்கி
சரித்திரம் படித்திட
சாந்தமானது ஓர் ஜீவன்...
கொந்தளிக்கும்
ஜுவாலைகளில்
வெந்து தணலானது
ஓர் ஜீவன்..
வெட்கம் கெட்ட புன்னகையில்
ஆடையவிழ்த்தது
ஓர் ஜீவன்..
ஆழ்கடலின் மையத்தில்
அன்பை தேடியது
ஓர் ஜீவன்...
ஜீவன்கள் பலவிதம்
அதிலே
ஒவ்வொன்றும்
ஒரு ரகம்...
அதிசய ராகமாய்
இசைவான ஜீவன்கள்
அன்னிச்சையின் அந்தத்தில்
அசையத்தொடங்கும்
மீண்டும் ஓர் தேடலுக்காய்...!
No comments:
Post a Comment