Thursday, September 13, 2012

நிசப்தம் சப்திக்கும் வேளை..



சர்ப்பத்தின் ஓசையுடன்
சலனமற்றதாய்
காற்று...

சகலமும் அடங்கி
உலகமானதாய்
இரவு...

சூழ்ந்துகொண்ட
கருமேகத்துள்
சுடர்விடத்துடிக்கும்
நிலவு...

நிசப்தம்
சப்திக்கும் வேளை
அது..

ஊரோரத்துப் பட்டமரம்
அதில்
ஊசலாடும்
உருவற்ற நிழல்கள்..

காலக் கிருஹத்தின்
கபட நாடகத்தால்
காலமாகிப்போன
நிறமற்ற
சடலங்கள்..

மீண்டும்
நிசப்தம்
சப்திக்கும் வேளை
அது..

No comments:

Post a Comment