Sunday, April 22, 2012

காலக்கண்ணாடியில் பிரிவு...



பிரிவு-
பிரிவு என்ற வார்த்தைகள்
எம்மில் எழுதிச்சென்ற
கவிதைகள் பல..

மௌனத்தின் சங்கீதத்தில்
ஜனன கீதம் இசைக்கிறோம்..

இனிக்கும் நினைவுகளில்
துயரத்தை சுமக்கிறோம்..

காதல் கீதங்கள்
கனவினை சுமந்துநிற்க-
கனவின் சோகங்கள்
மலர்களாய் பூத்திருக்க
பிரிகின்றோம் நாம்
மீண்டும்
எங்காவது சந்திப்போமென...

ஒலிக்கும்
இசைகூட
மௌனமாய்
சபிக்கப்படுகிறது
எமக்குள்..

பார்வைகளின்
பரிதவிப்பு
படபடப்புடன்
தொட்டுச்செல்கிறது..

நினைத்துச் சென்ற
எண்ணங்கள்
வண்ணங்களாய்
மாறி
அழியாத
ஓவியமாகிறது
மனச்சுவரினிலே..

பிரிவு..பிரிவு
எண்ணிய
எண்ணங்களை
காலக்கண்ணாடியின்
ஓரத்திலே
படரவிடப்போகும்
ஓர்
தொலைக்கப்பட்ட
இன்பச்சிதறல்...

தொலைந்தோம்..
தொலைக்கப்பட்டோம்...
மீண்டும்
என்றோ
இணைவோம்
என்பதனால்..

Tuesday, April 17, 2012

என் நிஜம்..



நிழலாகிப்போன

என் நிஜம்
நீதானே..
தொலைவாகிப்போன
என் சுகம்
நீதானே..
தேடி தேடி
தொலைந்தது
நாட்கள்..
மீண்டும் மீண்டும்
மீட்டும் உன் 

நினைவுகள்

என்னுள்ளே..

வலி



என் மனதின்
வலிகள்
உங்களுக்கு
ஏளனமாய் தான்
தெரியும்..

ஆனால்

விழிநீரில் 
நனையும்
என்
தலையணைக்குத்தெரியும்
அதன் கனம்
என்னவென்று...!

Monday, April 16, 2012

மரிக்காத நினைவுகள்...



தொட்டுச்சென்றது
காற்று..- என்னை
விட்டுச்சென்றது
காலம்...

எட்டிநின்று
தொட்டுப்பர்க்கும்
உன் நினைவுகள் மட்டும்
எப்போதும்
என்னோடு..

மலரும்
உன் நினைவுகள்
மாறாத வடுவாக
எப்பொழுதும் என்னுள்ளே..

மாறாத - மாற்றப்படாத
மாற்றமுடியாத
ஓர் எண்ண அலையாக
நீ மட்டுமே வேரோடினாய்
என்னுள்ளே...

சுற்றுகின்ற பூமிகூட
அசைவற்றுப்போகலாம்
ஆனால்
உன் சுவாசத்தில்
துடிக்கும் என் இதயம்
எப்போதும் மரிக்காது..

மரிக்கப்படாத மறைக்கப்படாத
மாற்றமுடியாத
காதலாக
எம் காதல்
நம்முள்ளே..

தொலைக்கப்பட்ட
சோகங்களும்
தொலைந்துவிட்ட
மாற்றங்களும்
தொலைவாகிப்போனது
இன்றைய வாழ்வினிலே..

வாழ்வின் வேரோடி
வசந்த நீர் தேடி
ஆழ்கடலில்
அலைகின்றேன்
ஆதாரம் நீயாக..

மழலையின் நாதமும்
மயங்கி நிற்கும்
மன்னவன் உன்னில்..

அன்பான உன் பாசம்
அலையான உன் நேசம்
ஆழ்ந்த உன் ஸ்வாசம்
அத்தனையும் இசையாகும்..

மழையின் சங்கீதம்
மார்போடு ஸ்வரமாகும்..
மலரின் மௌனமொழி
மனதோடு கவியாகும்..

ஆனால்
ஏதோ தனிமை..
இன்று-
தொட்டுச்சென்றது
காற்று..-
என்னைவிட்டுச்சென்றது
காலம்...

தொலைதூரப்பயணமிது..
தெவிட்டாத சலனமிது..
தெம்மாங்கு பாடலாக
இசைபாடும் இளமையிது..

ஆனால் ஏனோ
மறைந்துபோனது
இன்றைய நாளின் 
எண்ண அலைகள்..

எனினும்
மாற்றமுடியாத
ஒன்று-

மரிக்கப்படாத
மறைக்கப்படாத
மாற்றமுடியாத
காதலாக எம் காதல்..

Monday, April 2, 2012

என் நாட்கள்...


உனது வருகைக்கான
காத்திருப்புகள் கூட
அழகானவைதான் எனக்கு...

உன் அழைப்பிற்காய்
காத்திருக்கும்
தொலைபேசியை
நொடிக்கொரு முறை
பார்த்தபடி நகர்கிறது
நிமிடங்கள்...

உனது அன்பில்
தவழ்ந்திட
தவித்திருக்கிறது இதயம்..

உன்னோடு இருக்கும்
அந்த இனிய
தருணங்களை
நினைத்து-கனத்து
ஏங்கியபடி
நகர்கிறது
என் நாட்கள்...