உன்னருகில்
நானிருந்தால்
என்
என்
விழிகளுக்கு
உன்னை தவிர
வேறு எதுவுமே
தெரிவதில்லை...
நீ
என்னை
பார்க்கிறாய்
என்பதை
உணராதவள்
அல்ல நான்..
எனினும்
விழிகளை
உயர்த்தி
உன்னை
பார்ப்பதற்கு
என்னுள்
சக்தி எழுவதே
இல்லை..
உன்
ஒவ்வொரு
அசைவுகளும்
சிதறடிக்கும்
என் மனதை...
நீ
எங்கோ
பார்க்கையில்
உன்னை
நாணத்துடன்
பார்க்கும்
என்
விழிகள்
உன்
கன்னக்குழி அழகில்
மோதி சிதைந்து போகும்..
உன்னை உரசும்
காற்றுதேவன்
என்னை
மோதும்போது
உடல் சிலிர்த்து நிற்கும்..
உன் கரத்துடன்
உன் கரத்துடன்
என் கரம்
ஸ்பரிசித்த போது
புதிதானேன் நான்..
மரணித்தலின்
ஒவ்வொரு
கணமும்
என்
ஜனனம்
உன் மடியில்...!
No comments:
Post a Comment