Saturday, October 22, 2011

பயணங்கள்...



உன்னோடு 
நான் 
செல்லும் 
பயணங்கள் 
ஒவ்வொன்றும் ... 
இனிமையானவை தான் எனக்கு ...
 


உன் கரத்துடன் 
என் கரம் இணைத்து ...
உன் கரம் 
என் இடை வளைத்து ..
உன் மூச்சை 
நான் யாசித்து...
செல்லும் இவ் 
வாழ்கையின் பயணம்...
எனக்கு புனிதமானது 
மட்டுமல்ல..
பெறுமதியானதும் கூட ...
 


சிநேகிதா...
நீ என்னுடன் 
வருகையில் ....
பாலையும்...
சோலையாகுமே .. ...
என் வாழ்வு....
வசந்தமாகுமே...
 


என்றும் ...
என்னோடு 
உன் பயணங்களும்.. ..
உன்னோடு 
என் பயணங்களும்... ...
முடிவின்றித் 
தொடரட்டும் ....!!!

No comments:

Post a Comment