Saturday, October 29, 2011

அழகில்லையே...!


மழையுடன்
இதமான குளிர்
மனதிற்கு
தட்பமான சுகம்..

மழை சிந்தும்
துளியின் இசை
என்
மனதிற்கு
சங்கீதம்..

பச்சை இலை வழி
மழைத்துளி
என்
மௌனம்
களையும் மருந்து    ..

சலனமற்ற
மனதிலே
இவையனைத்தும்
உன்னை
அழைத்துவரும்
எனக்காய்..

தட்பத்தில்
வெப்பம்
உன்னை
யாசிக்க
உள்ளம் தேடியது
உன் அனைப்பினை
சுகிக்க..

அழகிய
மழைப்பொழுதுதான்
எனினும்
அழகனே-
இவை உன்னைவிட
அழகில்லையே...!    
 

No comments:

Post a Comment