Sunday, October 30, 2011

விடையற்ற வினா...



மனதிலே
ஆயிரம்
எண்ணங்கள்...
 

ஒரு நொடியில்
சிதைந்துபோகும்
மாயமென்ன...?

 
கனவுக்கோட்டைகள்
பல
சுவடுதெரியாமல்
போன மர்மமென்ன..?

 
ஏதேதோ
எண்ணங்கள்.
என்னென்னவோ
கனவுகள்...

 
மொழிதுள்ளும்
உதடுகளில்
மௌனம்
புதைகிறது..

 
எழில்கொஞ்சும்
விழிகளில்
ஏக்கம்
மலர்கிறது..

 
உள்ளத்தின்
உயிர்ப்பில்
இன்று-
உணர்வுகள்
சிலையாகிறது..

 
ஏனிந்த
சோகம்..
 
எதற்கிந்த
வேதனை....

 
விடைகாணா
பல
கேள்விகளுடனே
தொடர்கிறது
வாழ்க்கை...!

                                                                       

No comments:

Post a Comment