Sunday, October 23, 2011

அன்பின் கண்ணாளனே..



நிஜங்கள் 
அனைத்தும் 
நீயானாய்...


மெளனங்கள் 
அனைத்திலும் 
இசையானாய்...


சோகங்கள் 
அனைத்திலும் 
சுகமானாய்...



என்னை 
கொள்ளை கொண்டது
உன் 
வெள்ளை உள்ளமே...

அதன் பின்பே 
என் 
விழிகளுக்கு 
விருந்தானாய்...


சோகங்கள் 
மறைந்தது. 
சுமைகள் 
விலகியது. 


உன் பெயர் கூறி 
வசந்தக் காற்று 
எனை வருடியது...


தினமும் உன் 
வருகைக்காய் 
விழிகள் 
ஏங்கியது...


மொழிகள் 
ஊமையாக 
இதயம் 
உன் நாமத்தையே 
ஜெபித்தது 
இன்று...


கண்ணா 
காத்திருக்கிறேன் 
உனக்காக- 
உன்னை சேரும்
நாள் எண்ணி; 
வசந்த வருகையை 
எதிர்பார்த்து....

மீண்டும் 
மழலையாகி 
நான் 
இன்று 
உனக்காக 
பார்த்திருக்கிறேன்...!

No comments:

Post a Comment