Sunday, October 23, 2011

'விடியல் தோன்றாக் கனவு'

என்றோ 
ஒரு நாள் 
அந்தியிளம் 
மாலை தனில் 
அழகின் நிலவொழியின் 
மடியில் மயங்கிநின்றேன்..
 







என் 
துயரங்கள் 
துடைக்கப்பட்டனவோ..
துன்பங்கள் 
புதைக்கப்பட்டனவோ..
இனிமைகளும்-செழுமைகளும் 
எனக்காய் 
புதிதாக விதைக்கப்பட்டனவோ..
 


உதய ராகம் 
இசைக்கப்பட்டு 
புதிதாய் 
என் ஜனனம் 
பரினமித்ததோ..
 


உள்ளம் துள்ளியது..
உதடுகள் புன்னகை 
தனை மெதுவாக 
கசிந்தன..
புது  சுகந்தம் 
என்றெண்ணி 
விழிகள் மொட்டவிழ
விடிந்தது 
என் வாழ்க்கை..
 


புதியதாய் 
எழுந்தேன் நான்..
அப்போது தான் 
புரிந்தது..
இன்னும் 
'விடியல் தோன்றாக் கனவு' 
இவை என.. !

No comments:

Post a Comment