Thursday, October 27, 2011

இன்றைய நாள்...



அழகிய நினைவுகள்
அவை..
இனிய நினைவுகள்
அவை..

 
உன்னோடு
நான் வரும்
கனவுப்பொழுதுகள்
என்றும் வேண்டும்
என்னோடு..

 
உன் விரல் தொட்டு
உன் கரம் கோர்த்து
உன்னை யாசித்து
உன்னுடனே தொலைவேனே..   

 
மலரும்
மலர்கள்
நம்மை
பார்த்து சிரிக்கும்..

 
வீசும்
தென்றல்
நம்மை தொட்டு
சுவைக்கும்...

 
உன் அதரத்தில்
மலரும் புன்னகை-
அதில் நான் தொலைந்ததை
நீ அறிவாயா..?

 
கன்னத்தில் தோன்றும்
உன் குழியழகின்
வசிகரம்தனில்
உள்ளம் விழுந்ததே..

 
உன் நெற்றியில்
தவளும்
கற்றை முடியழகு-
விழியோரத்தில்
வண்ணத்திரை
எனக்கு.. 


சிலபொழுதுகளில்
நம்மிடையே
மௌனங்களும்
பேசும்..

 
சில கணங்களில்
என்னிடம்
உன் கைகளும்
பேசும்...       

 
உன்
மூச்சுக்காற்றுக்கூட
இன்றைய பொழுதில்
இசையாகியது
எனக்கு...

நம்
விழிகள்
இசையோடு கலக்கும்
தருணங்களில்
ஆயிரம் கனவுகள்
என்னுள்ளே
மலர்ந்திடும்..

உன்
உடல்  மட்டுமல்ல-
உள்ளமும்
அழகு தான்..

கண்ணாளனே..-
உன் விரலின்
பனி சுகத்தையும்ம்
உன் இதழின்
இனிய வசந்தத்தையும்
சுகிக்கவேண்டும்
என்
இறுதி
மூச்சுவரை..

 
அந்த
நாட்களை
எண்ணியவாறு
கனவுகளை
சுமந்து
நான்.....!!!

                               

No comments:

Post a Comment