துடித்த உறவுகளும்;
வெடித்து சிதறிய கற்'பனைகளு'ம்;
பசியடங்கா இருளில் ;
புண்பட்டுபோன
பாவை இதயங்களும் ;
பசி முற்றிப்போன
பாதக பிண்டங்களும் ;
என்றும்-
அழிக்க முடியாத
கறை படிந்த
மெளன அவலங்கள்.....
சோகங்களை
சுமையாக்கி ..
விழிநீர் தனை
மொழியாக்கி ..
நைந்துபோனது
எம் சொந்தம். .........
கறை படிந்த
இருளிடையே
கசியும் கண்நீரில்
கழுவப்படாத சுமைகளும்-
சுமக்க முடியாத
பாவங்களும்-
சுவாசிக்க மரந்து
சலனமற்றுப்போன
இரவுகளும் ...
காற்றுக்கூட
குருதி குடிக்கும்
காலங்களாய்
மாறி நிற்க
நிர்கதியானது
மானுடம். ...
அவல ஓசைகள்
நிசப்த அலைவரிசையினிடயே
ஒலிபரப்பாகிட
நாளையாவது
விடியுமா
என எங்கும்
இங்கு மானுடம்-
மீண்டும்
தொடரும்
உயிர்ப்பற்ற நகர்வினை ..!
No comments:
Post a Comment