Sunday, October 23, 2011

உயிர்ப்பற்ற நகர்வு....!



துடித்த உறவுகளும்;
வெடித்து சிதறிய கற்'பனைகளு'ம்;
பசியடங்கா இருளில் ;
புண்பட்டுபோன 
பாவை இதயங்களும் ;
பசி முற்றிப்போன 
பாதக பிண்டங்களும் ;
என்றும்-
அழிக்க முடியாத 
கறை படிந்த 
மெளன அவலங்கள்..... 


சோகங்களை   
சுமையாக்கி ..
விழிநீர் தனை       
மொழியாக்கி ..
நைந்துபோனது 
எம் சொந்தம். .........


கறை படிந்த 
இருளிடையே 
கசியும் கண்நீரில் 
கழுவப்படாத சுமைகளும்- 
சுமக்க முடியாத 
பாவங்களும்-
சுவாசிக்க மரந்து 
சலனமற்றுப்போன
இரவுகளும் ...



காற்றுக்கூட 
குருதி குடிக்கும் 
காலங்களாய்                                    
மாறி    நிற்க 
நிர்கதியானது 
மானுடம். ...


அவல ஓசைகள் 
நிசப்த அலைவரிசையினிடயே 
ஒலிபரப்பாகிட 
நாளையாவது 
விடியுமா 
என எங்கும் 
இங்கு மானுடம்-
மீண்டும் 
தொடரும் 
தனது 
உயிர்ப்பற்ற நகர்வினை ..!


No comments:

Post a Comment