Wednesday, October 26, 2011

முடிவு..?



ஏதோ மனதில்
ஒரு வெறுமை..
ஏனோ விழிகளில்
ஒரு பாரம்..

 
என்றோ 
தொலைத்த
ஞாபகங்கள்
இன்றும் வந்து
இம்சை செய்திட
வாழ்க்கையே 
தொலைந்தது
போன்ற ஒரு
நினைவு..

 
வாழ்க்கையை
வெறுத்தபோது
வாழ்க்கை என்னை 
பிடித்துக்கொண்டது..                                        


வாழ்க்கையை
விரும்பும் போது
வாழ்க்கை என்னை
வெறுக்கிறதே...

 
எங்கு
செல்லும்
இப்பயணம்..?

 
முடிவு..?

                               

No comments:

Post a Comment