தொலைதூர நிலவாக
சினேகிதியே,
உன் அன்பின்
ஆழ் கடலின்
வெண் சிப்பியின்
முத்தாக- நான் இன்று
மாறிவிட்டேன்!
இல்லை இல்லை
மாற்றிவிட்டாய்!
என்னவளே
எண்ணங்கள்
உனையே தேட
மெளனங்கள்
இன்று
இசை பாடின
என்னுள்ளே !
சுவாசிக்க மறந்த
காற்றும்
துடிக்க மறுக்கும்
இதயமும்
உன்னை எண்ணி
வாடிநிற்க
தொலைதூர நிலவாக
நீ இன்று
என் விழியில்....!
No comments:
Post a Comment