Saturday, October 22, 2011

தொலைதூர நிலவாக



சினேகிதியே, 
உன் அன்பின் 
ஆழ் கடலின் 
வெண் சிப்பியின் 
முத்தாக- நான் இன்று 
மாறிவிட்டேன்! 


இல்லை இல்லை 
மாற்றிவிட்டாய்! 


என்னவளே 
எண்ணங்கள் 
உனையே தேட 
மெளனங்கள் 
இன்று 
இசை பாடின 
என்னுள்ளே ! 



சுவாசிக்க மறந்த 
காற்றும் 
துடிக்க மறுக்கும் 
இதயமும் 
உன்னை எண்ணி 
வாடிநிற்க 
தொலைதூர நிலவாக
நீ இன்று 
என் விழியில்....!

No comments:

Post a Comment