இவள் புலம்புகிறாள்..
அணைப்பதற்கோ
அணைப்பதற்கோ
யாருமில்லை..
பெற்ற உறவுகள்
சுமையாக..
உற்ற உறவுகள்
உற்ற உறவுகள்
பகையாக..
நட்பின் உறவுகள்
நட்பின் உறவுகள்
நலிந்துபோக
நடை பினமாகியது
நடை பினமாகியது
இவள் வாழ்க்கை..
புன்னகையை
மறந்து
விம்மி வெடிக்கும்
இவள்
இதயம்..
உயிர்ப்பின்
துடிப்பில்
துயரத்தை
சுமந்தவாறு
இவள்
ஜனனம்..
விழிநீரின்
வழியே
இவள்
அவலம்..
என்றோ
ஒரு நாள்
இவை எல்லாம்
களையப்படும்..
7 குதிரைகள்
பூட்டிய தேரில்
வருவான் ராஜ குமாரன்...
இவள்
விழிநீர் தனை
இதழ்களால்
களைவான்...
காதல் தேவனை
எதிர்பார்த்து
கவலைகளை
தன்னுள்
புதைத்தபடி
காத்திருக்கிறாள்-
இங்கே
ஒரு குட்டி இளவரசி...!
No comments:
Post a Comment