Sunday, October 30, 2011

உன்னைத்தேடி....


அழகிய
மழைத்துளிகள்
என்னை
தொட்டபோது
 

அன்பே,
வந்தாய்
நீ-
என்னருகில்...

 

சின்ன
மழைத்துளி
சொட்டச்சொட்ட
என்னைத்தீண்டிட
 

உன்
தீண்டலில்
உயிர்த்ததுபோன்ற
நினைவு
என்னுள்ளே...

 

முத்து
மழைத்துளி
முத்தம்
சிந்தியது
என்னுதட்டில்..

 

தொலைந்தேபோனேன்
நான்
உன்
இதழின்
அணைப்பினில்..

 

என்னுடலை
நனைத்தது
மழைத்துளியாயினும்
மன்னவனே,
உன்
நெருக்கமே
விரவியது
என்னுள்ளே...

 

மண்ணுக்கு
மழை
அருகிலிருந்ததாலும்
நான்
சிறகடித்தேன்
விண்ணின்
தனிமையில்...

 

என்னுடனான
ஒவ்வொரு
நிகழ்வுகளும்
உன்னையே
நினைவூட்ட
 

உன்
ஏக்கத்தில்
தொலைந்தவளாய்
 

உன்னைத்தேடி
இங்கு
நான்....!

No comments:

Post a Comment