Friday, October 14, 2011

மெளன நிலை…

இரவு வானின் நிசப்தவேளைகள்
இதயத்தின் சலனத்தை
இம்சித்து எழுப்பும் வேளை..
கவிகளின் தாற்பரியமும்
கனவுகளின் சிதறல்களும்
நிலைகுலைந்து நிர்க்கதியாகும் வேளை..
சுடர்விட்ட விண்மீன்களும்    
ஒளிதந்த குளிர் நிலவும்
சுடரற்று- ஒளியற்று போய்விட
சுவாசிக்க மறுத்த இதயமும்
புன்னகை மரத்த இதழ்களும்
நிலை குலைந்துபோன உணர்வுகளும்
மெளனமான கவிவழியே புலம்பும் நிலை…

No comments:

Post a Comment