Friday, March 16, 2012
Wednesday, March 14, 2012
மரணித்துக்கொண்டிருக்கும் வேர்..
வாழ்வில் எத்தனை விடயங்களை
நாம் தொலைத்திருக்கின்றோம்..
ஆனால்
தொலைக்க விரும்பாத ஒன்று- பாசம்.
கனவின் மடிதனிலே
கவிபாடும் நேரங்களில்
கண நேரமாவது
இனிமை தருவது
நம்மீது எவரோ கொண்ட-
நாம் எவர்மீதோ கொண்ட
பாசம்..!
வாழ்வின் ஏக்கங்களில்
இதுவும் ஒன்று..
எவராலும்
மறுக்கப்படாத- வெறுக்கப்படாத
நிஜம் இது..
இருந்தாலும்
சிலவேளைகளில்
இது
பொய்த்துப்போவதுமுண்டு..
''கண்மூடித்தனமான நேசம்
ஒருவனை
முட்டாளாக்கிவிடுகின்றது''
உண்மைதான்..
தகுதியறிந்துதான் பாசம்
வைக்கவேண்டியுள்ளது
இன்றைய உலகில்..
பாசம்- அது ஒரு கலை!
பாசம்- அது ஒரு கவிதை!
பாசம்- ஏங்கித்தவிக்கும்
உள்ளங்களுக்கு அரு மருந்து!
பாசம்-உலகின் சரித்திர சுவடி!
பரிபூரணமான பாசம்
உலகையே மாற்றிவிடுகின்றது..
எனிவரும் காலங்களில்
பாசத்தின் வேர்களை
நாம்
மரணித்த மனிதத்துள்
தேடவேண்டியிருக்கும்..!
பாசம் வேஷமாகாமல்
நேசம் செய்வோம்..
மரணித்துக்கொண்டிருக்கும்
வேர்களுக்கு
உரமூட்டுவோம்- மனிதம்
வாழ்வதற்காய்...!
Sunday, March 11, 2012
Monday, March 5, 2012
உனக்காய் என் வாழ்த்துக்கள் ♥ ♥ ♥
நம்முடன்
இரண்டாம் முறையாய்
கலக்கும்
தித்திக்கும் உன்
♥ பிறந்த தினம் ♥
இளமையின்
எழிலோடும்..
இதயத்தின்
சுகத்தோடும்
வாழ்வினில் வரும்
ஓர்
♥ வசந்தத் திருநாள் ♥
ஜெயித்த கனவிற்கும்
ஜெயிக்கும் நினைவிற்கும்
தொலைந்த உறவிற்கும்
விதைத்த பாசத்திற்கும்
பாலமாய் வரும்
♥ அழகிய பொன்னாள் ♥
உன் உதட்டுப் புன்னகை
உள்ளத்தோடு கலந்து
உதிரத்திலே உறையவைக்கும்
♥ அற்புத நன்நாள் ♥
ஒன்றல்ல இரண்டல்ல
இந்நாட்கள்
ஓராயிரம் காண்போம்
எம்வாழ்வில்
♥ இருவரும் இணைந்து ♥
காலக்கண்ணாடியின்
கைகளில் தவழ்ந்து
உன் கனவுகள்
மெய்ப்படவேண்டும்-
என் கவிகள்
உனக்கு
பாமாலையாக வேண்டும்..
♥ ♥ ♥ இதயத்தில் கலந்த அன்புடன்
உனக்காய் என் வாழ்த்துக்கள் ♥ ♥ ♥
இரண்டாம் முறையாய்
கலக்கும்
தித்திக்கும் உன்
♥ பிறந்த தினம் ♥
இளமையின்
எழிலோடும்..
இதயத்தின்
சுகத்தோடும்
வாழ்வினில் வரும்
ஓர்
♥ வசந்தத் திருநாள் ♥
ஜெயித்த கனவிற்கும்
ஜெயிக்கும் நினைவிற்கும்
தொலைந்த உறவிற்கும்
விதைத்த பாசத்திற்கும்
பாலமாய் வரும்
♥ அழகிய பொன்னாள் ♥
உன் உதட்டுப் புன்னகை
உள்ளத்தோடு கலந்து
உதிரத்திலே உறையவைக்கும்
♥ அற்புத நன்நாள் ♥
ஒன்றல்ல இரண்டல்ல
இந்நாட்கள்
ஓராயிரம் காண்போம்
எம்வாழ்வில்
♥ இருவரும் இணைந்து ♥
காலக்கண்ணாடியின்
கைகளில் தவழ்ந்து
உன் கனவுகள்
மெய்ப்படவேண்டும்-
என் கவிகள்
உனக்கு
பாமாலையாக வேண்டும்..
♥ ♥ ♥ இதயத்தில் கலந்த அன்புடன்
உனக்காய் என் வாழ்த்துக்கள் ♥ ♥ ♥
Subscribe to:
Posts (Atom)