Wednesday, December 23, 2015

தனிமைத்தூளி.



நேற்றோடு ஏழுநாட்கள் கழிந்திருந்தன. இன்று எட்டாவது நாள். அந்த பெரிய ஆலமர வேர்களில் தனித்து சாய்ந்திருப்பதுமட்டுமே இப்பொழுதெல்லாம் அவளுக்கு ஆறுதலாயிருக்கின்றது. நட்பு, காதல், நேசம் என்று உறவுகளை வளர்த்துக்கொள்ள அவள் இனியும் தயாரில்லை. இன்றளவும் தொலைத்தவையும் தொலைந்தவையுமே போதுமென்று எண்ணியிருந்தாள். 

"ட்ட்ட்ர்..... ட்ட்ட்ர்...." 

அவள் அலைபேசி அலறியது. ஆறேழு அலறலின்பின்,

 'ஹலோ' 

'ஹலோ பூர்ணா' 

'ம்ம்' 

'என்னம்மா ஏன் கதைக்கல? என்ன ஆச்சு' 

'ஆஹ் நான் கதக்கேல்லயோ. ஓம் ஓம் நான் கதைக்கல. எனக்கு இந்த தனிமைதான் பிடிச்சிருக்கு ஷரத்' 

'ஏய் லூசு என்ன ஆச்சு உனக்கு. நான் தான்டி உன்கூட கதக்கல. மன்னிச்சிடும்மா' 

'இதோபார் ஷரத். நான் உன்னோட சண்டையெல்லாம்போடல. நிஜமாவே கோபமும் இல்லை' 

'பிறகு ஏன்மா மௌனமா இருக்காய்?' 

'ஹஹா மௌனம் ம்ம் மௌனம்தான் அழகானது ஷரத். இந்த மௌனம் மட்டுமே போதும் நான் வாழ. நினைவுகளோடு பேசிக்கொள்வேன் கனவுகளோடே நடந்துசெல்வேன். 
ஹஹ என்ன ஷரத் நான் இப்பிடியெல்லாம் கதக்கிறனெண்டு ஆச்சரியமா இருக்கா? ஏதோ தோணிச்சு அதுதான் சொன்னன்' 

'பூர்ணா இப்பிடியெல்லாம் சொல்லாதம்மா. உன் பிரண்ட்ஸ்கிட்டயும் உன்ன கேட்டன். அவயள் உன்னை பார்க்கலயாம் கனநாளா' 

'ஓம் ஷரத் அவயளுக்கு கனநாளா நான் தேவைப்படல. அதுதான் மறந்துபோச்சினம்போல' 

'ஏன்டி இப்பிடி சொல்றாய்?' 

'ம்ம் விடுங்க ஷரத் சேர் அவங்க அவங்களுக்கு ஆயிரம் வேலை. நீங்க பிசியா இருப்பீங்க. சோ பாய். டேக்கெயார்' 

பொங்கிவந்த கண்ணீரை அணைபோட்டு தடுக்க மனமுன்றி பொட்டல்வெளியை வெறித்தபடி ஆலமர வேரில் சாய்ந்துகொண்டாள். அணைத்துக்கொண்டது தனிமைத்தூளியின் ஆலம்வேர் கூடல். 


-பிறைநிலா-