கனவுகளின்
தாரகைக்கு
கவிதைகளே
பாடலானது..
மொழிகளின்
இனிமையோ
மௌனத்தில்
கானமிசைத்தது..
மீட்டமுடியாத
ஸ்வரங்களாய்
எண்ணங்கள்
மறைந்துபோயிருந்தது...
ஏக்கங்கள்
மிகுந்த விழிகளில்
சோகங்கள்
பூபாளமிசைத்தது..
சொர்க்கத்தில்
நரகமுண்டோ
இன்பத்தில்
துன்பமுண்டோ..?
தொலைவிலே
தொலைந்துவிட்ட
வாழ்க்கை
பார்த்து நகைத்தது...
விழிநீரும்
வஞ்சிக்கப்பட்ட
இதயமும்
எக்காளமிட்டது...
எனினும்
அந்ததாரகை மட்டும்
அதே மௌனத்துடன்
விடியலை நோக்கியது...!
தாரகைக்கு
கவிதைகளே
பாடலானது..
மொழிகளின்
இனிமையோ
மௌனத்தில்
கானமிசைத்தது..
மீட்டமுடியாத
ஸ்வரங்களாய்
எண்ணங்கள்
மறைந்துபோயிருந்தது...
ஏக்கங்கள்
மிகுந்த விழிகளில்
சோகங்கள்
பூபாளமிசைத்தது..
சொர்க்கத்தில்
நரகமுண்டோ
இன்பத்தில்
துன்பமுண்டோ..?
தொலைவிலே
தொலைந்துவிட்ட
வாழ்க்கை
பார்த்து நகைத்தது...
விழிநீரும்
வஞ்சிக்கப்பட்ட
இதயமும்
எக்காளமிட்டது...
எனினும்
அந்ததாரகை மட்டும்
அதே மௌனத்துடன்
விடியலை நோக்கியது...!