Saturday, December 10, 2011

உள்ளத்து உணர்வு..!



ஏதோ
தெரிந்த பயணங்களில்
தொலையாத
ஓர் சோகம்..

 
விழிகளிலே
என்றும்
விலகாத
கனவுகள்...

 
உள்ளத்தில்
எழும்
எண்ணங்கள்
ஏக்கங்களாய்
எஞ்சி நிற்கும்...

 
சில பொழுதுகளில்
என்னையும் அறியாமல்
உள்ளத்தின்
விம்மல்கள்
கவிகளாய்
வெளித்தோன்றும்..

 
ஆனால்
அதற்கான
உனது கேள்விகளுக்கு
பதில் தெரியாது
மீண்டும்
உள்ளத்திலேயே
உறைந்திடும்...!

No comments:

Post a Comment