மனதளவில்
ஏதோ
வலிகளை சுமந்து
விம்முகின்றது
ஆழ் மனம்...
ஏதோ
என்னையும்
அறியாமல்
காயப்படுத்திவிட்டேன்..
மன்னிப்பு
கேட்கும் நிலை
எனக்கில்லை..
மாறாத
உன் அன்பு
பரிகாசமற்ற
உன் பாசம்..
தாய்
போன்றவன்
நீ...
உன்
சேயாகியவள்
நான்..
தவறு செய்தால்
மன்னிப்பாயா..??
வார்த்தைகள்
விம்முகின்றன..
என் கவிகள்
விழி நீர் சிந்துகன்றன..
மொழிகள்
ஊமையாகி
மௌனமாய்
அழுகின்றன...
மௌனமான
இதயத்திலே
உணர்வுகளால்
ஏங்குகின்றேன் -
மன்னிப்பாயா....????
No comments:
Post a Comment