Tuesday, December 13, 2011

செல்லமடி நீ எனக்கு....!



அழகிய விழிகளில்
குறும்பு பார்வைகள்...
சின்ன இதழ்களில்
செல்ல சிணுங்கல்கள்...


பிஞ்சு ஒன்றின்
புன்னகை போல
உயிரை அள்ளும்
உன் பூவிதழ் சிரிப்பு..



நீ கூறும்
செல்லக்கதைக்களும்
கவியாகுமே
உன் இதழ் வழியே...


உன் பார்வையில்
அன்பின் ஏக்கங்கள்..
உள்ளத்தில்
உனக்கான தேடல்கள்..


ஏக்கமும்-தேடலும்
தொலைந்த இடம்
இன்று என்
உள்ளமோ உனக்கு..?


உன் உதட்டின்
புன்னகையை
ஸ்வாசிக்கிறேன் இன்று
நான்...


உன்
சில கெஞ்சல்களும்
சிணுங்கும் கொஞ்சல்களும்
கீதமாகும் என் உயிரில்...


என்றும்
உனக்கன உறவாக
நான்..


இன்று
எனக்கான
வாழ்வாக
நீ..


எப்போதுமே
செல்லமடி
நீ-
எனக்கு...!

No comments:

Post a Comment