அதிகாலை
விடிந்தும்
விடியாத
இரவுகள்
பல...
பூபாளம்
கானமிசைத்தும்
கேட்காத
உறவுகள்
பல...
மலரும்
மலரின்
சுகந்தமும்:
சிரிக்கும்
குழந்தையின்
நாதமும்
என்றோ
கசந்துபோனது...
விழிகளில்
ஏக்கமும்:
மொழிகளில்
முனகலும்:
உள்ளத்தில்
விம்மல்களுமே
மிச்சம்...
தொலைந்த
உறவுகளையும்-
தொலைக்கப்பட்ட
பாசங்களையும்
சுமந்தவாறு
நடைபிணங்களாய்
எம் ஜீவன்-
இன்றும் ஏக்கத்தில்...!!!
No comments:
Post a Comment