மண்ணில் உய்த்தான்
மாதவத்தான்!
மானுடர் களைதனை நீக்கி
மறுமையளித்தான்!
புனிதனாய் பூத்தான்
புண்ணியத்தான்!
பூதலம் செழித்தது
புண்ணியத்தால்!
இம்மை வாழ்வின்
இருளை நீக்கி
மறுமை வாழ்வில்
மகிழ்வை விதைத்தான்!
மானுடம் செழித்திட
செங்குருதி நீராக்கி
பூமிதனை நனைத்திட்டான்
புது-யுகம்தனை படைத்திட்டான்!
போற்றுவோம் யேசுபாலனை:
அவன் வழியில்-
உய்திடுவோம்
உலக வாழ்வுதனில்...!
No comments:
Post a Comment