Sunday, December 25, 2011

போற்றுவோம் பாலனை..!



மண்ணில் உய்த்தான்
மாதவத்தான்!
மானுடர் களைதனை நீக்கி
மறுமையளித்தான்!

புனிதனாய் பூத்தான்
புண்ணியத்தான்!
பூதலம் செழித்தது
புண்ணியத்தால்!


இம்மை வாழ்வின்
இருளை நீக்கி
மறுமை வாழ்வில்
மகிழ்வை விதைத்தான்!

மானுடம் செழித்திட
செங்குருதி நீராக்கி
பூமிதனை நனைத்திட்டான்
புது-யுகம்தனை படைத்திட்டான்!


போற்றுவோம் யேசுபாலனை:
அவன் வழியில்-
உய்திடுவோம்
உலக வாழ்வுதனில்...!

     இனிய நத்தார் திருநாள் நல் வாழ்த்துக்கள்..!!!

No comments:

Post a Comment