Saturday, December 3, 2011

உனக்காய் என்றும் என் கவி...! --------- ♥



உனக்காய்
என்றும் என் கவி...!
 



ஏதோ எண்ணத்தோன்றுகிறது..

விழிகளின்
ஏக்கங்களில்
உள்ளத்தின் எண்ணங்கள்
கோலமிடுகின்றன-
அவை
மௌனமாய்
அழுகின்றன
எனக்குள்....

நினைவுகளில்

நிலைத்தவன்
நீ..
நிஜங்களாய்
மாறியவன்
நீ..

உள்ளத்தில்

விதையாய் விழுந்து
விருட்சமாய்
எழுந்தாய்...

உன்

புன்னகைகளில்
நான்
மலர்கின்றேன்..

வட்டமிட்டு

துடிக்கும் உன்
விழிகளில்
நான் துளிர்க்கிறேன்..


என்னவனே,

உன் இனிமைதனையே
நான் நாடுகின்றேன்..

எனினும்

என்னால்
நீ வாடுவதா..?
என் வார்த்தைகளால்
உன் உள்ளம்
கசங்குவதா..?

எண்ணமுடியவில்லை

என்னால்-
தாங்கமுடியவில்லை
என் உள்ளத்தால்...

மறுக்காமல்

மன்னிப்பாயா
ஒருகணம்
என்னை...?

உனக்காய்

என்றும் என் கவி...!
 
 

No comments:

Post a Comment