Friday, December 23, 2011

நான் மட்டும் இங்கு..



காலங்களின்
காத்திருப்பில்- என்
கவிகளின்
ஜனனம்..

ஏதேதோ
எண்ணங்களால்
ஏமாற்றம்- அது
வழமை...


எண்ணியவை
எண்ணியபடி
கிடைப்பது-இங்கு
நிரந்தரமில்லை...

சோகத்தின்
மடிதனிலே
சுமைகளுடன்
வாழ்கின்றேன்...

சுகங்களைத்
தொலைத்துவிட்டு
விழிநீரில்
நீந்துகின்றேன்....

அவலங்கள்
அனைத்தும்
அடைக்கலமற்று
அலைபாய்கின்றன
இன்று...

என்றோ
தொலைந்த
இனிமைகளை
இன்றும்
தேடியவளாய்
நான் மட்டும்
இங்கு-இன்று...!!!


No comments:

Post a Comment