காலங்களின்
காத்திருப்பில்- என்
கவிகளின்
ஜனனம்..
ஏதேதோ
எண்ணங்களால்
ஏமாற்றம்- அது
வழமை...
எண்ணியவை
எண்ணியபடி
கிடைப்பது-இங்கு
நிரந்தரமில்லை...
சோகத்தின்
மடிதனிலே
சுமைகளுடன்
வாழ்கின்றேன்...
சுகங்களைத்
தொலைத்துவிட்டு
விழிநீரில்
நீந்துகின்றேன்....
அவலங்கள்
அனைத்தும்
அடைக்கலமற்று
அலைபாய்கின்றன
இன்று...
என்றோ
தொலைந்த
இனிமைகளை
இன்றும்
தேடியவளாய்
நான் மட்டும்
இங்கு-இன்று...!!!
No comments:
Post a Comment