Monday, September 26, 2011

எதிர்பார்த்தவாறு..!!!

காத்திருப்புகள்
கவி படைத்திட;
கனவுகளோ
சுமை படிந்திட;
விழிநீர்களே துணையாகும்..

இறந்த காலத்தின்
எச்சங்களும்;
நிகழ்காலத்தின்
மிச்சங்களும்
எதிர்காலத்தை
ரணமாக்கும்..

வீசும் காற்றுக்கூட
விதையாய் மாறும்
சக்தி பூமி
இது...

இன்று
சுகிப்பாரற்று
சலனமின்றி
துயில்கிறது...

என்றோ
புலரப்போகும்
விடியலை
எதிர்பார்த்தவாறு..!!!

பெண்மை

நீ இல்லாதபொழுதுகள்
என் உள்ளத்தை உருக்கிநிற்க
காமத்தையோ-ஸ்பரிசத்தின் இன்பத்தையோ
எதிர்பார்கவில்லை நான் உன்னிடமிருந்து...
உன் களங்கமற்ற அன்பொன்றே போதும்...
எனினும்,
உன்னருகில் நானிருக்கும் நேரங்களில்
எனக்கான உனது வருகையும்;
உனக்கான எனது காத்திருப்பும்-
உன் ஸ்பரிசங்களும்
உன் ஸ்வாசத்தின் தீண்டல்களும்
என்னைக் கொல்கிறதே...
பெண்மையின் மௌனமும்
வெட்கத்தின் அர்த்தமும
புரிகிறது இப்போது..
உன் தீண்டல்களின் வசந்தத்தில்
நான் மலரும் நாள் எப்போது....?