Monday, September 26, 2011

எதிர்பார்த்தவாறு..!!!

காத்திருப்புகள்
கவி படைத்திட;
கனவுகளோ
சுமை படிந்திட;
விழிநீர்களே துணையாகும்..

இறந்த காலத்தின்
எச்சங்களும்;
நிகழ்காலத்தின்
மிச்சங்களும்
எதிர்காலத்தை
ரணமாக்கும்..

வீசும் காற்றுக்கூட
விதையாய் மாறும்
சக்தி பூமி
இது...

இன்று
சுகிப்பாரற்று
சலனமின்றி
துயில்கிறது...

என்றோ
புலரப்போகும்
விடியலை
எதிர்பார்த்தவாறு..!!!

No comments:

Post a Comment