Monday, September 26, 2011

பெண்மை

நீ இல்லாதபொழுதுகள்
என் உள்ளத்தை உருக்கிநிற்க
காமத்தையோ-ஸ்பரிசத்தின் இன்பத்தையோ
எதிர்பார்கவில்லை நான் உன்னிடமிருந்து...
உன் களங்கமற்ற அன்பொன்றே போதும்...
எனினும்,
உன்னருகில் நானிருக்கும் நேரங்களில்
எனக்கான உனது வருகையும்;
உனக்கான எனது காத்திருப்பும்-
உன் ஸ்பரிசங்களும்
உன் ஸ்வாசத்தின் தீண்டல்களும்
என்னைக் கொல்கிறதே...
பெண்மையின் மௌனமும்
வெட்கத்தின் அர்த்தமும
புரிகிறது இப்போது..
உன் தீண்டல்களின் வசந்தத்தில்
நான் மலரும் நாள் எப்போது....?

No comments:

Post a Comment