Wednesday, March 14, 2012

மரணித்துக்கொண்டிருக்கும் வேர்..


வாழ்வில் எத்தனை விடயங்களை
நாம் தொலைத்திருக்கின்றோம்..
ஆனால்
தொலைக்க விரும்பாத ஒன்று- பாசம்.

கனவின் மடிதனிலே
கவிபாடும் நேரங்களில்
கண நேரமாவது
இனிமை தருவது
நம்மீது எவரோ கொண்ட-
நாம் எவர்மீதோ கொண்ட
பாசம்..!

வாழ்வின் ஏக்கங்களில்
இதுவும் ஒன்று..
எவராலும்
மறுக்கப்படாத- வெறுக்கப்படாத
நிஜம் இது..

இருந்தாலும்
சிலவேளைகளில்
இது
பொய்த்துப்போவதுமுண்டு..

''கண்மூடித்தனமான நேசம்
ஒருவனை
முட்டாளாக்கிவிடுகின்றது''

உண்மைதான்..
தகுதியறிந்துதான் பாசம்
வைக்கவேண்டியுள்ளது
இன்றைய உலகில்..

பாசம்- அது ஒரு கலை!
பாசம்- அது ஒரு கவிதை!
பாசம்- ஏங்கித்தவிக்கும் 
உள்ளங்களுக்கு அரு மருந்து!
பாசம்-உலகின் சரித்திர சுவடி!

பரிபூரணமான பாசம்
உலகையே மாற்றிவிடுகின்றது..
எனிவரும் காலங்களில்
பாசத்தின் வேர்களை
நாம்
மரணித்த மனிதத்துள்
தேடவேண்டியிருக்கும்..!

பாசம் வேஷமாகாமல்
நேசம் செய்வோம்..
மரணித்துக்கொண்டிருக்கும்
வேர்களுக்கு
உரமூட்டுவோம்- மனிதம்
வாழ்வதற்காய்...!

No comments:

Post a Comment