Sunday, October 16, 2011

காவியத்தில்

www.tamilyouthcafe.com
கனவு தனில்  
கவியின் வாழ்க்கை
மொழிதனிலே
அதன் தொடர் பயணம்..

காற்றின் சுவாசத்தில்
காதலின் இனிய கீதத்தில்
மௌனத்தின் சலனத்தில்
எண்ணத்தின் வண்ணங்கள்...

தோற்றது உன்னிடத்தில்
ஜெயித்தது வசந்தத்தில்
வாழ்வது மொழியின் இனிமையில்
இறப்பது தமிழுக்காய்...

நேற்றைய பொழுதில்
நினைத்ததில்லை
இன்றைய பொழுதின்
சலனத்தை..

விழிநீர்தனை துணையாக்கி
வழி தெரியாமல்
தவிக்கும் பயணம்
இது...

விடிவெள்ளி தோன்றுகையில்
வியப்போடு நோக்கும்
பருவம்
இது...


வானில் வட்டமிடும்
வண்ண நிலவை
விழிக்குள் பிடிக்கும்
எண்ணம் இது..


பல கவிகள்
கனவுக்கவிகள்
சில கவிகள்
காவியக்கவிகள்...

காவியத்தில்
இதுவும்
ஒன்று...                                                                       

No comments:

Post a Comment